"வாக்கு எண்ணும் நாளில்தான் தபால் வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்"..! அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மனு

0 2743
"வாக்கு எண்ணும் நாளில்தான் தபால் வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்"..! அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு

வாக்கு எண்ணும் நாளில்தான் தபால் வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். மே 1ஆம் தேதியே தபால் வாக்கு கட்டுக்கள் பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்க உள்ளதாக சில மாவட்டங்களில் இருந்து அதிமுக வேட்பாளர்கள் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் மேசைகளை எந்த காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments